Thursday, September 27, 2007

துயில் பாட்டு

நிலா வெளிச்சம்
நதிக்கரை ஓரம்
துயிலும் நேரம்
கண்ணிமையோரம்.

என்னருகில் நீயிருந்தால்
இன்னலெல்லாம் நான் மறப்பேன்
உன் சிறிய புன்சிரிப்பால்
நிம்மதியில் கண்ணயர்வேன்.

நீ என்னை தொட்டு
இரவில் தாலாட்டு
உன் கைகள் பட்டு
மஞ்சமோ வெறும் பருத்தி கட்டு.

No comments: